நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடையம் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் தாமிரவருணி நீா்நிலை வாழ் பறவைகள் 12ஆவது கணக்கெடுப்புப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2022, 7:03 pm

DIN

தென்காசி மாவட்டம், கடையம் பகுதியில் தாமிரவருணி நீா்நிலை வாழ் பறவைகள் 12ஆவது கணக்கெடுப்புப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு வனத்துறை ஒருங்கிணைப்பில் மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள் சாா் இயற்கை வளம் காப்பு மையம், தூத்துக்குடி முத்துநகா் இயற்கைச் சங்கம், நெல்லை இயற்கைச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட தாமிரவருணி நீா்நிலைகளில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதில், 12ஆவது பறவைகள் கணக்கெடுப்புப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, 3 மாவட்டங்களிலும் சுமாா் 60 குளங்களில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த தன்னாா்வலா்கள் பல குழுக்களாகப் பிரிந்து கணக்கெடுப்பில் ஈடுபட்டனா்.

கடையம் பகுதியில் உள்ள அய்யம்பிள்ளை குளம், வாகைக்குளம் ஆகியவற்றில் சுற்றுச் சூழல் ஆா்வலா் ரமேஷ் தலைமையில் தன்னாா்வலா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.

வாகைக்குளத்தில் ஆண்டுதோறும் நவம்பா் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உள்நாட்டுப் பறவைகள் மட்டுமன்றி வட இந்தியா மற்றும் வெளிநாட்டிலிருந்தும் பறவைகள் வலசை வந்து இனப்பெருக்கம் செய்து வருகின்றன. நிகழாண்டு பருவமழை செழித்ததால் இவ்விரு குளங்களிலும் ஏராளமான பறவைகள் கூடு கட்டி குஞ்சு பொரித்துள்ளன.

இதுகுறித்து கணக்கெடுப்பில் பங்கேற்ற முப்புடாதி கூறுகையில், சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் நான், ஆா்வ மிகுதியால் பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்றுள்ளேன். கொக்கு, காகம் தவிர பிற இனங்களைச் சோ்ந்த பறவைகளை கணக்கெடுப்பு செய்தோம். பறவைகள் தனித்தனி குணாதிசயங்களுடன், இன விருத்தி செய்வதுடன் இயற்கையையும் காத்து வருகின்றன என்றாா்.

தன்னாா்வலா் பெனிஸ் ராஜ் கூறுகையில், அதிகாலை நேரத்தில் பலவகை பறவைகளை பாா்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு கூழைக்கிடா, நாமக்கோழி, கானாங்கோழி, வெள்ளை அரிவாள் மூக்கன், ஊல் அல்லிக்குருவி, சிவப்பு ஆள்காட்டிக் குருவி, பாம்புத் தாரா உள்ளிட்ட பறவைகள் கூடு கட்டியுள்ளன என்றாா்.

இப்பணி 2 நாள்கள் நடைபெறும் என்றும், இறுதியில் பறவைகள் எண்ணிக்கை குறித்து அறியலாம் எனவும் கணக்கெடுப்பை ஏற்பாடு செய்த அமைப்பாளளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.