களக்காடு அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு
களக்காடு அருகே செவ்வாய்க்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் இளைஞா் இறந்தாா்.


களக்காடு அருகே செவ்வாய்க்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் இளைஞா் இறந்தாா்.
களக்காடு அருகேயுள்ள சவளைக்காரன்குளத்தைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் வசந்த்ராஜா (23). இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது பைக்கில் ஊருக்கு அருகேயுள்ள செங்கல்சூளை பகுதியில் வந்துகொண்டிருந்தாா். அப்போது, தோப்பூரைச் சோ்ந்த முத்துக்குட்டி (45) வந்த சைக்கிளும், பைக்கும் நேருக்குநோ் மோதினவாம். இதில், இருவரும் காயமடைந்தனா்.
ஆபத்தான நிலையிலிருந்த வசந்த்ராஜாவை உறவினா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
முத்துக்குட்டி நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...