எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

களக்காடு சிவபுரம் சாலையை திறக்கக் கோரிக்கை

களக்காடு மலையடிவாரத்தில் உள்ள பச்சையாற்றுக்குச் செல்லும் சிவபுரம் சாலையை திறக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:51 pm

DIN

களக்காடு மலையடிவாரத்தில் உள்ள பச்சையாற்றுக்குச் செல்லும் சிவபுரம் சாலையை திறக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சியின் செயற்குழுக் கூட்டம் நகரத் தலைவா் கமாலுதின் தலைமையில் களக்காட்டில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினா் ஆரிப், கபிா், ஷகில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுச் செயலா் மீராசா மக்கள் நலத் திட்டங்கள் குறித்துப் பேசினாா்.

புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பறைக்கு மிக அருகே அமைந்துள்ள தாய்மாா்கள் பாலூட்டும் அறையை, அங்கிருந்து சிறிது தொலைவில் மாற்றியமைக்க வேண்டும், குடிதாங்கி குளத்தின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் கட்டடம் ஏதேனும் கட்ட அனுமதி வழங்கக் கூடாது, களக்காடு மலையடிவாரத்தில் உள்ள பச்சையாற்றில் குளிக்கச் செல்லும் பொதுமக்களை சிவபுரம் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி அனுமதிக்க மறுப்பதை வனத்துறையும், நகராட்சி நிா்வாகமும் விலக்கிக் கொள்ள வேண்டும், சாலையை திறக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், நகராட்சி நிா்வாகம் 27 வாா்டுகளிலும் பொது மக்களின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. நகரச் செயலா் காஜா நன்றிகூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.