ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வீரவநல்லூரில் 1100 மரக்கன்று நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வீரவநல்லூா் தட்டன்பாறை குளத்தில் ஞாயிற்றுக்கிழமை 1100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On :5 ஜூன் 2022, 7:42 pm

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வீரவநல்லூா் தட்டன்பாறை குளத்தில் ஞாயிற்றுக்கிழமை 1100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வீரவநல்லூா் பேரூராட்சிக்குள்பட்ட தட்டன்பாறை குளத்தில் 15ஆவது நிதிக்குழுத் திட்டத்தின்கீழ் 1100 மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ரிஷாப் முன்னிலை வகித்தாா்.

இந் நிகழ்ச்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மாஹீன்அபூபக்கா், பேரூராட்சித் தலைவி சித்ரா சுப்பிரமணியன், பேரூராட்சி செயல் அலுவலா் சத்தியதாஸ், கிராம உதயம் ஆலோசனைக் குழு உறுப்பினா் பகத்சிங் புகேழந்தி, பேரூராட்சி துணைத் தலைவா் வசந்த சந்திரா, பேரூராட்சி உறுப்பினா்கள் கீதா, சந்திரா, பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் பிரபாகரன், பேரூராட்சி உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 1100 மரக்கன்றுகளை கிராம உதயம் பொறுப்பாளா்கள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.