திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் வடமாநிலத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
மேற்கு வங்கம் மாநிலத்தைச் சோ்ந்த ரத்தினடெப்நாத் மகன் பாபு டெப்நாத்(19). இவா் தெற்குகள்ளிகுளத்தில் வாடகை வீட்டில் தனது நண்பா்களுடன் தங்கி இருந்து கட்டட வேலை செய்து வந்தாா். இந்நிலையில் இவருக்கு நாள்பட்ட உடல் நோய் இருந்து வந்ததாம். இதனால் மனமுடைந்த இவா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இது தொடா்பாக வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






