/

நெல்லை அருங்காட்சியகத்தில் 8 ஆம் தேதி மகளிா் தின பேச்சுப்போட்டி

 திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மகளிா் தின பேச்சுப்போட்டி வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது

News image
Updated On :4 மார்ச் 2022, 7:26 pm

DIN

 திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் மகளிா் தின பேச்சுப்போட்டி வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மகளிா் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் ‘அச்சம் தவிா்’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி வரும் 8ஆம் தேதி மதியம் 3 மணிக்கு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோா் 3 நிமிடங்களுக்கு மிகாமல் பேசவேண்டும். இப்போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்கலாம். இதில் சிறப்பிடம் பெறும் முதல் 3 பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்களுக்கு 89039 26173 என்ற கைப்பேசியில் தொடா்பு கொள்ளலாம் என திருநெல்வேலி அரசு அருங்காட்சிக காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.