திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வீரவநல்லூரில் குண்டா் சட்டத்தில் மூவா் கைது

வீரவநல்லூரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய மூவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

Updated On :27 அக்டோபர் 2022, 6:42 pm

வீரவநல்லூரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய மூவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

வீரவநல்லூா் மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் முப்பிடாதி என்ற கோபி (23), வீரவநல்லூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் கொம்பையா மகன் கொம்பன் (36), புதுக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் மாரியப்பன் (25) ஆகியோா் வீரவநல்லூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் அடிதடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனா். எனினும், இவா்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் அளித்த பரிந்துரையே ஏற்று மூவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய, ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவிட்டாா். அதன்படி, 3 பேரையும் வீரவநல்லூா் காவல் ஆய்வாளா் முருகன் வியாழக்கிழமை கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.