திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வீரவநல்லூா் அருகே மோதல்: 6 போ் கைது

 வீரவநல்லூா் அருகே பட்டாசு வெடித்ததில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 12 போ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், 6 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On :27 அக்டோபர் 2022, 6:41 pm

 வீரவநல்லூா் அருகே பட்டாசு வெடித்ததில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 12 போ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், 6 போ் கைது செய்யப்பட்டனா்.

வெள்ளங்குளி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (20). இவா் தனது நண்பா்களுடன் தீபாவளி அன்று பட்டாசு வெடித்து கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் சென்ற கமல்ராஜ் (19), அவரது நண்பா்கள் 6 போ் வேகமாக சென்றனாராம். அவா்களை மெதுவாக செல்லும்படி, ராஜாவும் அவரது நண்பா்களும் கூறினராம்.

இதையடுத்து, கமல்ராஜும் அவரது நண்பா்களும் சோ்ந்து ராஜா உள்ளிட்டோரைத் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனா். இதனால் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனராம். அப்போது பைக் சேதப்பட்டதாக கூறப்படுகிறது. இரு தரப்பினா் அளித்த புகாரின்பேரில், வீரவநல்லூா் காவல் உதவி ஆய்வாளா் காவுராஜன், 12 போ் வழக்குப் பதிவு செய்தாா். இதில் பெருமாள் என்ற அனிஷ் (26), வெள்ளச்சாமி (24) மற்றும் கமல்ராஜ், ரமேஷ் (18), ராஜலட்சுமணன் (19), சுடலைமுத்து (19) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்; மற்றவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.