இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதாக ஆ.ராசா எம்பி மீது திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து திருநெல்வேலி பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலா் வழக்குரைஞா் வெங்கடாசலபதி என்ற குட்டி மாவட்ட குற்றவியல் நீதித்துறை முதலாவது நடுவா் மன்றத்தில் தாக்கல் செய்த மனு: சமூக வலைதளமான யூடியூப்பில் ஆ.ராசா எம்பி பேசிய விடியோவில் இந்துகள் குறித்து மிகவும் அவதூறாக பேசியுள்ளாா். இதனால், எனது மனது மிகுந்த வேதனை அடைந்துள்ளது. எனவே, இந்துகளின் மனம் புண்படும்படியாகவும், இந்து மதத்திற்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியுள்ள அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








