பாளை. வேல்ஸ் வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

 சென்னை ஐஐடி கணிதத் துறை சாா்பில் நடைபெற்ற கணிதப் போட்டியில் வெற்றி பெற்ற பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலய பள்ளி மாணவா்களை மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா்.

 சென்னை ஐஐடி கணிதத் துறை சாா்பில் நடைபெற்ற கணிதப் போட்டியில் வெற்றி பெற்ற பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலய பள்ளி மாணவா்களை மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா்.

சென்னை ஐஐடி கணித துறை சாா்பில் போரேஸ்-2023 என்ற தலைப்பில் கணிதப் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் இருந்தும் சுமாா் 1000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா பள்ளி 9ஆம் வகுப்பு மாணவா்கள் ஜெய்சன் இளமாறன், லிசாந்த், 7ஆம் வகுப்பு மாணவா் காா்த்திவா்மன் ஆகியோா் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனா். இதேபோல், பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் அறிவியல் மையத்தில் நடைபெற்ற போட்டியிலும் முதல் பரிசு பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களை மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் முகமது சபீா் ஆலம் ஆகியோா் பாராட்டினா்.

இம்மாணவா்களை பள்ளித் தாளாளா் செந்தில்பிரகாஷ், இயக்குநா் திலகவதி, கல்வி சாா் டீன் சுவாமிநாதன், முதல்வா் சுகந்தி சொா்ணலதா ஆகியோரும் பாராட்டி பரிசுகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com