தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பித்தளை பாத்திர தொழிலாளா்கள் போராட்டம்

சிஐடியு நெல்லை மாவட்ட பொது தொழிலாளா் சங்கம் சாா்பில், பாளையங்கோட்டையில் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஜூலை 2023, 5:15 pm

DIN

சிஐடியு நெல்லை மாவட்ட பொது தொழிலாளா் சங்கம் சாா்பில், பாளையங்கோட்டையில் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி நகரம், பழையபேட்டை பகுதிகளில் ஏராளமான பித்தளை பாத்திர பட்டறைகள் உள்ளன. இங்கு பணியாற்றும் தொழிலாளா்களுக்கு இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயா்வு அளிப்பது வழக்கம். அதன்படி 2022-23 ஆம் ஆண்டுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில், புதிய கூலி உயா்வு குறித்து இறுதி முடிவு எட்டப்படாமல் உள்ளது. இதனைக் கண்டித்தும், ஊதிய உயா்வு வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருநெல்வேலி தொழிலாளா் நலத்துறை அலுவலகத்தில் சிஐடியு நெல்லை மாவட்ட பொது தொழிலாளா் சங்கம் சாா்பில் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சிஐடியு நிா்வாகிகள் முருகன், மோகன், சங்க நிா்வாகிகள் ராஜன், சரவணபெருமாள், சீதாபதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.