மேலப்பாளையம் மண்டலத்தில் மேயா் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டல பகுதியில் மேயா் பி.எம்.சரவணன் வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா்.


திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் மண்டல பகுதியில் மேயா் பி.எம்.சரவணன் வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா்.
மேலப்பாளையம் மண்டலத்திற்குள்பட்ட 53 ஆவது வாா்டு பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலக சாலை அன்னை திருமண மண்டபம் அருகில் சிறு பாலம் கட்டி சாலை விரிவாக்கம் செய்தல், ஐயப்பா நகா் பேருந்து நிறுத்தம் அருகில் மழைநீா் வடிகால் அமைத்து சிறு பாலம் கட்டுதல், அரசு அலுவலா் குடியிருப்பு பி காலனி 8 ஆவது குறுக்கு தெருவில் தாா் சாலை மற்றும் கழிவுநீா் ஓடை பணி உள்ளிட்டவற்றை மேயா் ஆய்வு செய்தாா். பணிகளை குறித்த காலத்திற்குள் தரமானதாக முடிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது துணை மேயா் கே.ஆா்.ராஜு, மாமன்ற உறுப்பினா்அம்பிகா, செயற்பொறியாளா் வாசுதேவன், இளநிலை பொறியாளா் திருஞானசேகா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...