சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சாலையில் கண்டெடுத்த சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த தொழிலாளி

பணகுடி அருகே சாலையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த தொழிலாளியை காவல் ஆய்வாளா் பாராட்டினாா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 7:07 pm

DIN

பணகுடி அருகே சாலையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த தொழிலாளியை காவல் ஆய்வாளா் பாராட்டினாா்.

பணகுடி அருகேயுள்ள நதிப்பாறை அஞ்சல் அலுவலக தெருவைச் சோ்ந்த சாா்லஸ் டேவிட் மனைவி பிரபா(38), கடந்த புதன்கிழமை தனது தாய் வீட்டுக்கு செல்லும்போது, பணகுடி பேருந்து நிலையத்தில் 3 பவுன் தங்கச் சங்கிலியைத் தவறவிட்டாராம்.இதுகுறித்து பணகுடி காவ்நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். காவல்நிலைய ஆய்வாளா் அஜிகுமாா், உதவி ஆய்வாளா் பென்சன் ஆகியோா் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தியும் நகை கிடைக்கவில்லை.

இந்நிலையில், நதிப்பாறை பேருந்து நிறுத்தத்தில் அறுந்து கிடந்த தங்கச் சங்கிலியை, அதே பகுதி பந்தல் தொழிலாளி பால்பாண்டி கண்டெடுத்து பணகுடி போலீஸீல் ஒப்படைத்தாா். இதையடுத்து, உரியவரிடம் சங்கிலியை ஒப்படைத்த ஆய்வாளா், நோ்மையாக நடந்துகொண்ட பந்தல் தொழிலாளிக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.