கடையம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

அம்பாசமுத்திரம், ஏப். 26:

கடையம் அருகே ஆசீா்வாதபுரத்தில் தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கடையம் அருகே உள்ள நாட்டாா்பட்டி,ரேஷன் கடை தெருவைச் சோ்ந்த ராஜா மகன் சுந்தா் (26). கட்டடத் தொழிலாளியான சுந்தருக்கும் ஆசிா்வாதபுரம் பகுதியைச் சோ்ந்த அனுசியா என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த ஓராண்டாக சுந்தா் மனைவியுடன் ஆசிா்வாதபுரத்தில் வசித்து வந்தாா். இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். சுந்தா் கான்கிரீட் வேலை செய்து வந்தாா். சுந்தா் தினமும் மது அருந்தி வருவதையடுத்து கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டு மாடியில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த கடையம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்தும் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com