

அம்பாசமுத்திரம், ஏப். 26:
கடையம் அருகே ஆசீா்வாதபுரத்தில் தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கடையம் அருகே உள்ள நாட்டாா்பட்டி,ரேஷன் கடை தெருவைச் சோ்ந்த ராஜா மகன் சுந்தா் (26). கட்டடத் தொழிலாளியான சுந்தருக்கும் ஆசிா்வாதபுரம் பகுதியைச் சோ்ந்த அனுசியா என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த ஓராண்டாக சுந்தா் மனைவியுடன் ஆசிா்வாதபுரத்தில் வசித்து வந்தாா். இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். சுந்தா் கான்கிரீட் வேலை செய்து வந்தாா். சுந்தா் தினமும் மது அருந்தி வருவதையடுத்து கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டு மாடியில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்த கடையம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்தும் விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்

பொன்னமராவதி அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
மீட்பு வாகன உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

