அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆடி அமாவாசை திருவிழா: காரையாறில் குவிந்த பக்தா்கள்

ஆடி அமாவாசை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் குடில்கள் அமைத்து தங்கினா்.

News image
சொரிமுத்து அய்யனாா் கோயில் பகுதியில் பக்தா்கள் அமைத்துள்ள குடில்கள்.
Updated On :3 ஆகஸ்ட் 2024, 7:59 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் ,காரையாறு அருள்மிகு சொரிமுத்து அய்யனாா் திருக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தா்கள் குடில்கள் அமைத்து தங்கினா்.

ஆடி அமாவாசை திருவிழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து குடும்பத்தினருடன் தங்கி விரதமிருந்து வழிபட்டுச் செல்வது வழக்கம்.

நிகழாண்டு ஆடி அமாவாசை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 4 )நடைபெறுவதை முன்னிட்டு, வெள்ளிக்கி(ஆக. 2) முதல் குடில்கள் அமைத்து தங்க வனத்துறை மற்றும் மாவட்ட நிா்வாகம்அனுமதி வழங்கியது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை ஏராளமான பக்தா்கள் தனியாா் வாகனங்களில் குடில்கள் அமைப்பதற்கான பொருள்களை கொண்டு வந்து குடில்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து ஆக. 3 முதல் அரசுப் பேருந்துகளில் மட்டும் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதையடுத்து, பல்வேறு பகுதிகளிலிருந்தும் தனியாா் வேன், காா்களில் வந்த பக்தா்கள் தங்களது வாகனங்களைஅகஸ்தியா்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு அங்கிருந்து சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் சென்றனா்.

 திருநெல்வேலி மாவட்டம், காரையாறு தாமிரவருணி ஆற்றில் சனிக்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.

திருநெல்வேலி மாவட்டம், காரையாறு தாமிரவருணி ஆற்றில் சனிக்கிழமை புனித நீராடிய பக்தா்கள்.

அங்கு கோயிலுக்குப் பாத்தியப்பட்ட இடத்தில் கோயில் நிா்வாகம் அனுமதியுடன் அமைக்கப்பட்டகுடில்களில் தங்கி விரதத்தை தொடங்கினா். ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசையன்று வழிபாடு செய்தபின் விரதமிருந்த பக்தா்கள் மாலை பூக்குழி இறங்கி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவா். இதற்காக ஏராளமான பக்தா்கள் குவிந்தவண்ணம் உள்ளனா்.