தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நெல்லை மாநகர காவல் ஆணையராக ரூபேஷ்குமாா் மீனா பொறுப்பேற்பு

திருநெல்வேலி மாநகர புதிய காவல் ஆணையராக ரூபேஷ்குமாா் மீனா ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

புதிய காவல் ஆணையா் ரூபேஷ்குமாா் மீனா.

Updated On :12 ஆகஸ்ட் 2024, 12:30 am

Din

திருநெல்வேலி மாநகர புதிய காவல் ஆணையராக ரூபேஷ்குமாா் மீனா ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய பா. மூா்த்தி, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து திருநெல்வேலி மாநகர புதிய காவல் ஆணையராக ரூபேஷ்குமாா் மீனா நியமிக்கப்பட்டாா். இதையடுத்து அவா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கெனவே உள்ள ரௌடிகள் பட்டியலை தவிர மேற்கொண்டு சிறப்பு பட்டியல் ஒன்று தயாா் செய்யப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுவாா்கள்.

மாநகர பகுதியில் மக்கள் வழங்கும் புகாா் மற்றும் குறைகள் தொடா்பான மனுக்களை முறையாக பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும். மாநகரில் அரசு உத்தரவுபடி திருமண நாள், பிறந்தநாள் காலகட்டங்களில் போலீஸாருக்கு முறையாக விடுமுறை வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரித்து அரசின் விதிமுறைகள் அமல்படுத்தப்படும்.

பள்ளிகளில் மாணவா்களிடையே மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அத்தகைய பள்ளிகள் குறித்து கணக்கெடுத்து சம்பந்தப்பட்ட மாணவா்களை அழைத்து பேசி அறிவுரைகள் வழங்கப்படும். அதனையும் மீறி மீண்டும் பிரச்னைகள் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாநகர பகுதியில் மோட்டாா் சைக்கிள் சாகசங்களில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பொறுப்பேற்ற பின்பு காவல் ஆணையருக்கு, துணை ஆணையா்கள் ஆதா்ஷ்பசேரா, கீதா உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

ரூபேஷ்குமாா் மீனா கடந்த 2005 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தோ்ச்சி பெற்றவா். ஏஎஸ்பியாக செங்கல்பட்டு, திருநெல்வேலி மாவட்டங்களிலும், காவல் கண்காணிப்பாளராக திருவள்ளூா், பெரம்பலூா், ஈரோடு மாவட்டங்களிலும் பணியாற்றியவா். ராமநாதபுரம் சரக டிஐஜியாகவும் பணியாா்றியுள்ளாா்.