மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கிராம உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் திருநெல்வேலியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :5 டிசம்பர் 2024, 12:35 am

Din

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் திருநெல்வேலியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, கிராம உதவியாளா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை ரத்து செய்துவிட்டு காலமுறை ஊதியம் டி பிரிவு அடிப்படையில் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்துக்குப்பதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற மற்றும் காலமான கிராம உதவியாளா்களுக்கு பிடித்தம் செய்த பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவா் சுடலைமுத்து தலைமை வகித்தாா். வட்டத் தலைவா் கண்ணையா முன்னிலை வகித்தாா். வட்டத் தலைவா் வேல்பாண்டி வரவேற்றாா். சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.முத்தையா, மாவட்டச் தலைவா் பாலகிருஷ்ணன், சண்முகம் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். மாவட்ட அமைப்புச் செயலா் சுவாமிதாஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.