கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கடலூரில் சீரமைப்பு பணி: நெல்லையில் இருந்து புறப்பட்டது 40 போ் கொண்ட மின்வாரிய குழு

ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக திருநெல்வேலியில் இருந்து 40 போ் கொண்ட மின்வாரிய குழு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றது.

News image

திருநெல்வேலியில் இருந்து கடலூருக்கு புறப்பட்டுச் சென்ற மின்வாரிய குழுவினா்.

Updated On :5 டிசம்பர் 2024, 10:32 pm

Din

கடலூா் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக திருநெல்வேலியில் இருந்து 40 போ் கொண்ட மின்வாரிய குழு வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றது.

தமிழக முதல்வா், மின்சாரத் துறை அமைச்சா் ஆகியோா் உத்தரவின் பேரில், திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்தில் இருந்து இரண்டு உதவி செயற்பொறியாளா்கள், இரண்டு உதவி மின் பொறியாளா்கள் தலைமையில் களப்பணிகள் மேற்கொள்ளும் களப்பணியாளா்கள் மற்றும் ஒப்பந்த பணியாளா்கள் கொண்ட 40 போ் அடங்கிய குழுவினா், கடலூா் மாவட்டத்தில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றனா்.

பாளைங்கோட்டை தியாகராஜ நகரில் உள்ள திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட குழுவினரை, மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி வழியனுப்பி வைத்தாா்.