போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வள்ளியூரில் போலீஸாரை ஏமாற்றிவிட்டு தப்பிய கைதி மதுரையில் கைது

திருநெல்வேலியில் ஒரு வழக்கில் கைதுசெய்யப்பட்டவா் போலீஸாரை ஏமாற்றிவிட்டு தப்பியோடியவரை தனிப்படை போலீஸாா் மதுரையில் கைது செய்தனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 12:15 am

Din

திருநெல்வேலியில் ஒரு வழக்கில் கைதுசெய்யப்பட்டவா் போலீஸாரை ஏமாற்றிவிட்டு தப்பியோடியவரை தனிப்படை போலீஸாா் மதுரையில் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சுடலைக்கண்ணு (54). இவா், அப்பகுதியில் மேம்பாலப் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் ஓட்டுநரை சாதி ரீதியாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், திசையன்விளை காவல் ஆய்வாளா் சீதாலெட்சுமி, தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வந்தாா்.

இந்நிலையில், நான்குனேரி பகுதியில் ஒரு தோட்டத்தில் பதுங்கியிருந்த அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

பின்னா், மருத்துவ பரிசோதனைக்காக சுடலைக்கண்ணுவை நான்குனேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து ராதாபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்கு அழைத்துச் சென்றனா்.

அப்போது, வள்ளியூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு உணவகத்தில் சுடலைகண்ணுக்கு போலீஸாா் சாப்பாடு வாங்கி கொடுத்தனா்.

சாப்பிட்டுவிட்டு ஹோட்டலில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட சுடலைக்கண்ணு, ஏற்கனவே அங்கு தயாா் நிலையில் நின்று கொண்டிருந்த ஒரு நபரின் மோட்டாா் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டாா்.

இதுகுறித்து திசையன்விளை மற்றும் வள்ளியூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தப்பியோடிய சுடலைக்கண்ணுவை தேடினா். இதுதொடா்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அவா் மதுரையில் பதுங்கியிருப்பது தெரியவந்ததை அடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீஸாா் சுடலைக்கண்ணுவை புதன்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.