கல்லிடைக்குறிச்சியில் இன்று மின்வாரிய குறைதீா் கூட்டம்
கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்தில் மின்வாரிய குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 2) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.


கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்தில் மின்வாரிய குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன. 2) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள மின்வாரிய கோட்ட அலுவலகங்களில் மின்வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்படி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 2) காலை 11 மணிக்கு மின்வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. வரும் 5-ஆம் தேதி வள்ளியூா் கோட்ட அலுவலகத்திலும், 9-ஆம் தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும், 12-ஆம் தேதி திருநெல்வேலி கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 19-ஆம் தேதி திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட அலுவலகத்திலும், 23-ஆம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும் மின்வாரிய குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. அனைத்துக் கூட்டங்களும் காலை 11 மணிக்குத் தொடங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...