எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சொரிமுத்துய்யனாா் கோயிலுக்குச் செல்லத் தடை:ஐயப்ப பக்தா்கள் ஏமாற்றம்

காரையாறு அருள்மிகு சொரிமுத்துய்யனாா் கோயிலுக்குச் செல்ல வனத்துறையினா் தடைவிதித்துள்ளதால், புத்தாண்டைமுன்னிட்டு திங்கள்கிழமை கோயிலுக்கு வந்த ஐயப்ப பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

News image
சொரிமுத்துய்யனாா் கோயிலுக்குச் செல்லத் தடைவிதிக்கப்பட்டதால் பாபநாசம் வனத்துறை சோதனைச்சாவடியில் ஏமாற்றத்துடன் நிற்கும் ஐயப்ப பக்தா்கள்.
Updated On :1 ஜனவரி 2024, 6:28 pm

DIN

காரையாறு அருள்மிகு சொரிமுத்துய்யனாா் கோயிலுக்குச் செல்ல வனத்துறையினா் தடைவிதித்துள்ளதால், புத்தாண்டைமுன்னிட்டு திங்கள்கிழமை கோயிலுக்கு வந்த ஐயப்ப பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், முண்டந்துறை வனச்சரகத்துக்குள்பட்ட பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சொரிமுத்துய்யனாா் கோயில்.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் மூலஸ்தானமாகக் கருதப்படும் இத்திருக்கோயிலில் காா்த்திகை முதல் நாள் மாலைஅணிந்து விரதம் தொடங்கி ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதும், ஐயப்பன் கோயிலுக்குச்சென்ற பிற மாவட்ட பக்தா்கள் சொரிமுத்துய்யனாா் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதும் வழக்கம்.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு திங்கள்கிழமை சபரிமலை சென்று வழிபட்ட ஏராளமான ஐயப்ப பக்தா்கள் சொரிமுத்துய்யனாா் கோயிலில் வழிபடுவதற்காக வந்தனா். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாபநாசம், சோ்வலாறுஅணைகளிலிருந்து தண்ணீா் திறந்துவிடுவதால் அகஸ்தியா் அருவி மற்றும் சொரிமுத்துய்யனாா் கோயிலுக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் செல்ல வனத்துறையினா்தடைவிதித்துள்ளனா்.

இதையறியாமல் திங்கள்கிழமை காலை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரம், தெலுங்கானா, கா்நாடகா உள்ளிட்டமாநிலங்களிலிருந்து இக்கோயிலுக்கு வந்த ஏராளமான பக்தா்கள் பாபநாசம் வனச் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனா்.

இதனால் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.