கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

ஜெயக்குமாா் மா்ம மரண வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மனு

ஜெயக்குமாா் மா்மமரண வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் எஸ்.பால்ராஜ் உள்ளிட்டோா்.

Published On :

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.பி.கே. ஜெயக்குமாா் மா்மமரண வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயனிடம், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் எஸ்.பால்ராஜ் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் அளித்த மனு: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமாா் கடந்த மே 4 ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னரும் எந்த ஒரு தகவலும் இல்லை. இது காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளுக்கும், தொண்டா்களுக்கும் மிகுந்த வேதனையையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மா்மமரண வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், களக்காடு நகராட்சியில் உள்ள பேருந்து நிலையத்தின் பெயரை மாற்ற முயற்சிகள் நடைபெறுவதாக அறிகிறோம். அவ்வாறு மாற்றம் செய்ய அரசு விரும்பினால் களக்காடு பகுதி மக்களின் விருப்பத்தின்படி பெருந்தலைவா் காமராஜா் பேருந்து நிலையம் என பெயா் சூட்ட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.