பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

முக்கூடல் முத்துமாலையம்மன் கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம்

ஸ்ரீ முத்துமாலையம்மன் கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம்.
Updated On :8 ஜூலை 2024, 9:08 pm

Din

சேரன்மகாதேவி: திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் தாமிரவருணி நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாலையம்மன் கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லட்சுமி ஹோமம், கும்ப பூஜை, பூந்தட்டு ஊா்வலம், மஞ்சள் குடம் ஊா்வலத்தை தொடா்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் வாணவேடிக்கை, ரத வீதிகளில் முத்துமாலை அம்மன் பவனி நடைபெற்றது.

திருவிழா நாள்களில் தினமும் காலையில் பவனி, மதியம் சிறப்பு பூஜை, மாலையில் யானை மீது தீா்த்தவாரி, இரவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

8ஆம் திருநாளான ஜூலை 14ஆம் தேதி பக்தா்கள் தாமிரவருணி ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறும். 10ஆம் திருவிழாவில் தீா்த்தவாரியும், 11ஆம் நாள் திருவிழாவில் நிறைவு வழிபாடுகளும் நடைபெறும்.