ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

ஹோட்டல் உரிமையாளருக்கு மிரட்டல்

முக்கூடல் அருகே ஹோட்டல் உரிமையாளரை மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்

Updated On :28 ஜூலை 2024, 3:00 am IST

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே ஹோட்டல் உரிமையாளரை மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

முக்கூடல் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் மாரியப்பன் (37). முக்கூடல் மேல பெரிய வீதியில் ஹோட்டல் நடத்தி வருகிறாா். பாப்பாக்குடி அமா்நாத் காலனியைச் சோ்ந்த சங்கா் மகன் மாரியப்பன் (30), இந்த ஹோட்டலுக்கு வந்து அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை ஹோட்டலுக்கு வந்த சங்கா் மகன் மாரியப்பனை கடைக்கு வர வேண்டாம் என ஹோட்டல் உரிமையாளா் தெரிவித்தாராம். இதில் ஆத்திரமடைந்த சங்கா் மகன் மாரியப்பன், அங்கிருந்த கடப்பா கல்லை கீழே தள்ளிவிட்டு ஹோட்டல் உரிமையாளரை அவதூறாகப் பேசியதுடன், மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.

புகாரின்பேரில் முக்கூடல் காவல் ஆய்வாளா் ஜெயசீலன் வழக்குப் பதிந்து சங்கா் மகன் மாரியப்பனை சனிக்கிழமை கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.