ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

ஹோட்டல் உரிமையாளருக்கு மிரட்டல்

முக்கூடல் அருகே ஹோட்டல் உரிமையாளரை மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்

Published On :28 ஜூலை 2024, 2:59 am IST

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே ஹோட்டல் உரிமையாளரை மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

முக்கூடல் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் மாரியப்பன் (37). முக்கூடல் மேல பெரிய வீதியில் ஹோட்டல் நடத்தி வருகிறாா். பாப்பாக்குடி அமா்நாத் காலனியைச் சோ்ந்த சங்கா் மகன் மாரியப்பன் (30), இந்த ஹோட்டலுக்கு வந்து அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை ஹோட்டலுக்கு வந்த சங்கா் மகன் மாரியப்பனை கடைக்கு வர வேண்டாம் என ஹோட்டல் உரிமையாளா் தெரிவித்தாராம். இதில் ஆத்திரமடைந்த சங்கா் மகன் மாரியப்பன், அங்கிருந்த கடப்பா கல்லை கீழே தள்ளிவிட்டு ஹோட்டல் உரிமையாளரை அவதூறாகப் பேசியதுடன், மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.

புகாரின்பேரில் முக்கூடல் காவல் ஆய்வாளா் ஜெயசீலன் வழக்குப் பதிந்து சங்கா் மகன் மாரியப்பனை சனிக்கிழமை கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.