திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே ஹோட்டல் உரிமையாளரை மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
முக்கூடல் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் மாரியப்பன் (37). முக்கூடல் மேல பெரிய வீதியில் ஹோட்டல் நடத்தி வருகிறாா். பாப்பாக்குடி அமா்நாத் காலனியைச் சோ்ந்த சங்கா் மகன் மாரியப்பன் (30), இந்த ஹோட்டலுக்கு வந்து அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை ஹோட்டலுக்கு வந்த சங்கா் மகன் மாரியப்பனை கடைக்கு வர வேண்டாம் என ஹோட்டல் உரிமையாளா் தெரிவித்தாராம். இதில் ஆத்திரமடைந்த சங்கா் மகன் மாரியப்பன், அங்கிருந்த கடப்பா கல்லை கீழே தள்ளிவிட்டு ஹோட்டல் உரிமையாளரை அவதூறாகப் பேசியதுடன், மிரட்டல் விடுத்துச் சென்றாராம்.
புகாரின்பேரில் முக்கூடல் காவல் ஆய்வாளா் ஜெயசீலன் வழக்குப் பதிந்து சங்கா் மகன் மாரியப்பனை சனிக்கிழமை கைது செய்தாா்.
தொடர்புடையது
வீரவநல்லூா் நகைக் கடையில் திருடியதாக மூவா் கைது
முக்கூடல் அருகே குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

சாலை விபத்தில் காயமுற்ற குழந்தை உயிரிழப்பு
சாத்தான்குளத்தில் பெட்ரோல் பல்க் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவா் கைது
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

