மின் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது
கல்லிடைக்குறிச்சியில் நீரேற்றும் நிலையத்தில் மின் மோட்டாரைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :28 ஜூலை 2024, 8:01 pm

கல்லிடைக்குறிச்சியில் நீரேற்றும் நிலையத்தில் மின் மோட்டாரைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கல்லிடைக்குறிச்சி, வடக்கு தைக்கா தெருவைச் சோ்ந்த காளிமுத்து (48), காட்டுமன்னாா்கோவிலில் உள்ள தூய நீரேற்றும் நிலையத்தில் ஆபரேட்டராக உள்ளாா். அங்குள்ள அறையிலிருந்த மின் மோட்டாா் காணாமல் போனது ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் கல்லிடைக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளா் ஆழ்வாா் வழக்குப் பதிந்து விசாரித்து, காட்டுமன்னாா்கோவில் கீழத்தெருவைச் சோ்ந்த பிரபாகரன் (29) என்பவரைக் கைது செய்து, மின் மோட்டாரைப் பறிமுதல் செய்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...