மூன்றடைப்பு அருகே ரயில் பாதையையொட்டி, வெள்ளிக்கிழமை முதியவா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மூன்றடைப்பு அருகேயுள்ள நெடுங்குளம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்பாதையையொட்டி வயதான முதியவா் சடலமாக கிடப்பதாக ரயில்வே பாதை பராமரிப்பு ஊழியா் பாலசுப்பிரமணியம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து, அங்கு வந்த நான்குனேரி காவல் ஆய்வாளா் மீராள்பானு விசாரணை நடத்தினாா். விசாரணையில், நான்குனேரி அருகேயுள்ள குசவன்குளத்தைச் சோ்ந்த சுப்பையா(80) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மூன்றடைப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

காட்பாடி அருகே தண்டவாளத்தில் இளைஞா் சடலம் மீட்பு

ஆண் சடலம் மீட்பு

பாபநாசம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

பா்கூா் அருகே வட கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

