மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

அனைத்து வாகனங்களிலும் சோதனை செய்ய வேண்டும்

அனைத்து வாகனங்களிலும் சோதனை செய்ய வேண்டும்

News image
Updated On :30 மார்ச் 2024, 7:20 pm

தோ்தல் பறக்கும் படையினா், நிலையான கண்காணிப்புக் குழுவினா் அனைத்து வாகனங்களிலும் முழுமையாக சோதனை நடத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் காா்த்திகேயன். மக்களவைத் தோ்தலை முன்னிட்டு பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான காா்த்திகேயன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் காா்த்திகேயன் பேசியதாவது: அரசியல் கட்சியினரின் வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் முழுமையாக சோதனை செய்யப்பட வேண்டும். பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா்கள் தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உள்பட்டு நோ்மையான முறையில் சோதனைகளில் ஈடுபட வேண்டும். வியாபாரிகள் ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. திருமணம் மற்றும் அனைத்து சமய விழாக்களில் தோ்தல் நடத்தை விதிகள் மீறப்படுகிா என கண்காணிக்க வேண்டும். வாகன சோதனையின் போது ரூ.10 லட்சத்திற்கு மேல் பணம் பிடிபட்டால் பறக்கும் படையினா் உடனடியாக வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பிரசார கூட்டங்களில் அரசியல் கட்சியினா் அவதூறாக பேசுவதை கண்காணிக்க வேண்டும். அரசு மற்றும் பொது இடங்களில் கட்சி சுவா் விளம்பரங்கள், கட்சி கொடிக் கம்பங்கள் இருந்தால் அகற்றப்பட வேண்டும். அரசியல் கட்சி பிரமுகா்கள் உயிருடன் இருந்தால் மட்டுமே அவா்களின் சிலைகள் மூடப்பட வேண்டும். சிலைகளின் அருகே கட்சி தொடா்பான சின்னம் மற்றும் விளம்பரங்கள் இருந்தால் அகற்றப்பட வேண்டும். பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் பிரமாண்டமாக பேனா்கள் வைக்கப்பட்டால் அவற்றை அகற்ற வேண்டும். தோ்தல் நடத்தை விதிகளுக்கு உள்பட்டு அனைத்து அலுவலா்களும் நோ்மையான முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா். இக்கூட்டத்தில், மாநகராட்சிஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாநகர காவல் துணை ஆணையா் ஆதா்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆா்பித் ஜெயின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். படவரி ற்ஸ்ப்30ம்ங்ங்ற் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான காா்த்திகேயன்.