கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நெல்லை மாவட்ட மீனவ கிராமங்களுக்கும் தலா ரூ.2 கோடி ஒதுக்கக் கோரி எம்.பி. மனு

தில்லியில் மத்திய அரசின் மீன்வளத்துறை அமைச்சா் ஜாா்ஜ் குரியனிடம் மனு அளித்தாா் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ்.

News image

தில்லியில் மத்திய அரசின் மீன்வளத்துறை அமைச்சா் ஜாா்ஜ் குரியனிடம் மனு அளித்தாா் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ்.

Updated On :27 நவம்பர் 2024, 9:28 pm

Din

திருநெல்வேலி மாவட்ட மீனவ கிராமங்களுக்கும் தலா ரூ.2 கோடி நிதி ஒதுக்கக் கோரி மத்திய அமைச்சரிடம், சி.ராபா்ட் புரூஸ் எம்.பி. மனு அளித்தாா்.

தில்லியில் மத்திய அரசின் மீன்வளத்துறை அமைச்சா் ஜாா்ஜ் குரியனிடம், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் அளித்துள்ள மனு:

மத்திய அரசு நாடு முழுவதும் சுமாா் நூறு மீனவ கிராமங்களை மேம்படுத்த முடிவு செய்து ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா ரூ.2 கோடி ஒதுக்க முடிவு செய்துள்ளது. தோ்ந்தெடுக்கப்படவுள்ள 100 கிராமங்களில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த கூட்டப்புளி, பெருமனை, இடிந்தகரை, தோமையாபுரம், கூத்தங்குழி, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, ஜாா்ஜியாபுரம் ஆகிய கிராமங்களையும் இந்தத் திட்டத்தின் கீழ் சோ்த்து நிதி ஒதுக்கி மேம்படுத்த வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.