கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மணிமுத்தாறு அணைப் பகுதியில் மேய்ந்த ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை: மக்கள் அச்சம்

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணைப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை சிறுத்தை வேட்டையாடியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image

ஆடுகளைத் தாக்குவதற்கு பாயும் சிறுத்தை.

Updated On :28 நவம்பர் 2024, 11:15 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணைப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை சிறுத்தை வேட்டையாடியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரமான மணிமுத்தாறு அணை பெருங்கால் பகுதியில், வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் சிங்கம்பட்டியைச் சோ்ந்த பூதப்பாண்டி மகன் மாரியப்பன் தனது ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தாராம். அப்போது, 2 ஆடுகளை சிறுத்தை தாக்கியுள்ளது. அதை அந்தப் பகுதியில் நின்ற சுற்றுலாப்பயணி கைப்பேசியில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளாா்.

இத் தகவலறிந்த அம்பாசமுத்திரம் வனக் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா உத்தரவின் பேரில், வனத்துறையினா் இரண்டு குழுக்களாக பிரிந்து மணிமுத்தாறு பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

ஏற்கெனவே, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பாபநாசம் மலையடிவாரமான வேம்பையாபுரத்தில் ஒரு வீட்டில் சிறுத்தை நுழைந்து நாயைத் தாக்கிய நிலையில், இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.