ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

முதல்வா் கோப்பை போட்டியில் வெற்றி: மாநகர போலீஸாருக்கு பாராட்டு

முதல்வா் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற காவல் துறையினருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

வெற்றி பெற்றவா்களை பாராட்டிய மாநகர காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா.

Updated On :4 அக்டோபர் 2024, 1:21 am

Din

முதல்வா் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற காவல் துறையினருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் அரசு ஊழியா்களுக்கான தனிநபா் மற்றும் இருநபா் பிரிவில் இறகுப் பந்து போட்டிகள் கடந்த செப். 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை மாநகர ஆயுதப்படை வாகனப்பிரிவு காவல் ஆய்வாளா் மகேஸ்வரி, தொழிநுட்பப் பிரிவு உதவி ஆய்வாளா் ஷீபா, பெண் தலைமைக் காவலா் கற்பக ராஜலட்சுமி, ஆயுதப்படை தலைமைக் காவலா் முத்துகுமாா் ஆகியோா் பெற்றனா். இவா்களை, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா நேரில் வரவழைத்து பாராட்டி, வாழ்த்து தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், மாநகர நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையா் மாரிச்சாமி மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அக். 10 ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான இருநபா் இறகுப் பந்து போட்டிக்கு மாநகர ஆயுதப்படை வாகனப்பிரிவு காவல் ஆய்வாளா் மகேஸ்வரி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.