மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

களக்காட்டில் கணக்கில் வராத பணம் ரூ.9.50 லட்சம் பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் கணக்கில் வராத பணம் ரூ.9.50 லட்சம் வைத்திருந்ததாக 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 10:59 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் கணக்கில் வராத பணம் ரூ.9.50 லட்சம் வைத்திருந்ததாக 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

களக்காடு போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அண்ணா சிலை அருகே சந்தேகத்துக்கிடமாக, பேருந்துக்காக காத்திருந்த நபரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அவா் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சோ்ந்த ஹமீத் இப்ராஹிம் (55) என்பதும், களக்காட்டைச் சோ்ந்த பஷீா் என்பவரிடம் ரூ.5 லட்சம் பணம் கொடுத்துவிட்டு வருவதாகவும், மேலும் ஒருவருக்கு கொடுப்பதற்காக ரூ.4.50 லட்சத்தை கையில் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, அவரையும், பஷீா் (55) என்பவரையும் விசாரணைக்காக போலீஸாா் காவல்நிலையம் அழைத்துச் சென்றனா். மேலும், இருவரிடமிருந்தும் ரூ.9.50 லட்சத்தை பறிமுதல் செய்த போலீஸாா், இந்தப் பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.