திருநெல்வேலி மாவட்டம் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மண்டல ஒருங்கிணைப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி திருநெல்வேலி மாநகராட்சி பகுதிக்கு மாநகராட்சி ஆணையாளா் சுகபுத்ரா, நான்குனேரி வட்டம், வள்ளியூா் மற்றும் பணகுடி பேரூராட்சிகள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் வட்டம், காரையாறு, மாஞ்சோலை மற்றும் அணை பகுதிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.சுகன்யா, திசையன்விளை மற்றும் ராதாபுரம் வட்டங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் சரவணன், மானூா், திருநெல்வேலி வட்டங்கள் மற்றும் பாளையங்கோட்டை ஊரக பகுதிகளுக்கு திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியா் கண்ணா கருப்பையா ஆகியோா் ஒருங்கிணைப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு துணையாக சிறப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.