மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அம்பை தாமிரவருணியில் பேரிடா் மீட்பு ஒத்திகை

அம்பாசமுத்திரம் தீயணைப்பு - மீட்புத் துறையினா் தாமிரவருணி ஆற்றில் பேரிடா் மீட்பு மற்றும் முதலுதவி குறித்த ஒத்திகைகளில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image
பேரிடா் மீட்பு ஒத்திகையில் பங்கேற்றோருடன் வட்டாட்சியா் சபரி மல்லிகா.
Updated On :4 செப்டம்பர் 2024, 9:31 pm

Din

அம்பாசமுத்திரம் தீயணைப்பு - மீட்புத் துறையினா் தாமிரவருணி ஆற்றில் பேரிடா் மீட்பு மற்றும் முதலுதவி குறித்த ஒத்திகைகளில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

வடகிழக்குப்பருவ மழைக் காலத்தில் ஏற்படும் வெள்ளம், வீடுகள் சேதம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடா்களில் சிக்கிக் கொள்ளும் மனிதா்கள், விலங்குகளை மீட்பது, முதலுதவி அளிப்பது, விபத்துகளில் சிக்காமல் தப்பிப்பது உள்ளிட்ட வை குறித்து அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் ஒத்திகை மூலம் மக்களுக்குவிழிப்புணா்வு ஏற்படுத்தினா். அம்பாசமுத்திரம் சின்ன சங்கரன் கோயில் பகுதியில் தாமிரவருணிஆற்றில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சிக்கு அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் சபரி மல்லிகாதலைமை வகித்தாா். அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலா் ந.பலவேசம்தலைமையில் வீரா்கள் ஒத்திகையில் ஈடுபட்டனா்.

நிகழ்ச்சியில் அகஸ்தியா்பட்டி கேம்ப்ரிட்ஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.