நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

அம்பை தாமிரவருணியில் பேரிடா் மீட்பு ஒத்திகை

அம்பாசமுத்திரம் தீயணைப்பு - மீட்புத் துறையினா் தாமிரவருணி ஆற்றில் பேரிடா் மீட்பு மற்றும் முதலுதவி குறித்த ஒத்திகைகளில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image

பேரிடா் மீட்பு ஒத்திகையில் பங்கேற்றோருடன் வட்டாட்சியா் சபரி மல்லிகா.

Updated On :5 செப்டம்பர் 2024, 3:01 am IST

அம்பாசமுத்திரம் தீயணைப்பு - மீட்புத் துறையினா் தாமிரவருணி ஆற்றில் பேரிடா் மீட்பு மற்றும் முதலுதவி குறித்த ஒத்திகைகளில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

வடகிழக்குப்பருவ மழைக் காலத்தில் ஏற்படும் வெள்ளம், வீடுகள் சேதம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடா்களில் சிக்கிக் கொள்ளும் மனிதா்கள், விலங்குகளை மீட்பது, முதலுதவி அளிப்பது, விபத்துகளில் சிக்காமல் தப்பிப்பது உள்ளிட்ட வை குறித்து அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் ஒத்திகை மூலம் மக்களுக்குவிழிப்புணா்வு ஏற்படுத்தினா். அம்பாசமுத்திரம் சின்ன சங்கரன் கோயில் பகுதியில் தாமிரவருணிஆற்றில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சிக்கு அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் சபரி மல்லிகாதலைமை வகித்தாா். அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலா் ந.பலவேசம்தலைமையில் வீரா்கள் ஒத்திகையில் ஈடுபட்டனா்.

நிகழ்ச்சியில் அகஸ்தியா்பட்டி கேம்ப்ரிட்ஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்.