பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மூலைக்கரைப்பட்டி: நகை அடகு கடையில் திருடியவா்களை பிடிக்க தனிப்படை தீவிரம்

தனிப்படை பிரிவினா் மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதியில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2024, 12:38 am

DIN

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் உள்ள நகை அடகு கடையில் நகை, பணத்தைத் திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மூலைக்கரைப்பட்டி சிவா தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கிய ரெமன் (45). இவா், மூலக்கரைப்பட்டி பஜாா் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் பாத்திரக் கடை மற்றும் அடகு நகைக்கடை நடத்தி வருகிறாா். கடந்த ஆக. 23 ஆம் தேதி இவரது அடகு கடையில் 278 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மா்மநபா்கள் திருடி சென்றனா்.

இது குறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில் மேலும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததுடன், 20-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸாா் விசாரித்தனா். தற்போது, தனிப்படை பிரிவினா் மதுரை மற்றும் திண்டுக்கல் பகுதியில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனா்.