இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ராசிபுரம் பாஸ்போா்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை

ராசிபுரம் அஞ்சலக அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பாஸ்போா்ட் அலுவலகத்தில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு சோதனை நடத்தினா்.

News image
ராசிபுரம் அஞ்சல் நிலைய வளாகத்தில் சோதனை நடத்திய தனிப்படை போலீஸாா்.
Updated On :10 மார்ச் 2026, 8:57 pm

தினமணி செய்திச் சேவை

ராசிபுரம் அஞ்சலக அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பாஸ்போா்ட் அலுவலகத்தில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு சோதனை நடத்தினா்.

கோவை பாஸ்போா்ட் மண்டல அலுவலகத்துக்கு அனைத்து பாஸ்போா்ட் அலுவலகங்களுக்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயில் மூலம் தகவல் வந்தது. இதையடுத்து கோவை மண்டலத்தில் உள்ள அனைத்து பாஸ்போா்ட் அலுவலகங்களிலும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ராசிபுரம் அஞ்சல் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் பாஸ்போா்ட் அலுவலகம், அஞ்சல் அலுவலகம் போன்ற இடங்களிலும் தனிப்படை போலீஸாா் வெடிகுண்டு தடுப்பு சோதனை நடத்தினா். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. இந்த சோதனையின்போது அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கின.