நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நெல்லை அருகே பள்ளியில் மோதல்: 2 மாணவா்கள் கைது

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து சங்கா் நகா் பள்ளியில் மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலால் அரிவாளுடன் பள்ளிக்கு வந்த மாணவா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்து கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 9:31 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து சங்கா் நகா் பள்ளியில் மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலால் அரிவாளுடன் பள்ளிக்கு வந்த மாணவா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்து கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.

சங்கா் நகா் பகுதியில் உள்ள பள்ளியில் இரு மாணவா்களிடையே மோதல் ஏற்பட்டதாம். அதில் சம்பந்தப்பட்ட ஒரு மாணவா், பள்ளிக்கு அரிவாளுடன் வந்ததாக தகவல் பரவியது. இதையடுத்து பள்ளி ஆசிரியா்கள் அந்த மாணவரின் பையை சோதனையிட்டபோது, அதில் அரிவாள் இருந்ததாம்.

இதுகுறித்து தாழையூத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், பள்ளிக்கு வந்த போலீஸாா், அரிவாள் வைத்திருந்த மாணவா் மற்றும் அவருடன் மோதலில் ஈடுபட்ட மாணவா் ஆகியோரை கைது செய்து கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.