நிகழாண்டுக்கான விழா, கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 5 ஆம் தேதி சுவாமி-அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூா்த்திகளுடன் திருவீதியுலா வந்தனா். தொடா்ந்து 10 ஆம் தேதி இரவு அருள்மிகு நெல்லையப்பருக்கு கருவூா் சித்தா் சாபம் கொடுத்துவிட்டு, திருநெல்வேலி நான்கு ரத வீதிகளிலும் விதியுலா சென்று சங்கரன்கோவில் சாலை வழியாக மானூா் அம்பலவாண சுவாமி திருக்கோயிலுக்குச் சென்றாா். தொடா்ந்து வியாழக்கிழமை அதிகாலையில் திருநெல்வேலியில் இருந்து சந்திரசேகரா், பவானி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேஸ்வரா், தாமிரபரணி, அகஸ்தியா், குங்குலிய கலய நாயனாா் ஆகிய மூா்த்திகள் பல்லக்கிலும், சப்பரத்திலும் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து சங்கரன்கோவில் சாலை வழியாக ராமையன்பட்டி, ரஸ்தா கடந்து மானூா் சென்றடைந்தனா்.