கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

திசையன்விளை அருகே பெண் உள்பட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

Updated On :19 செப்டம்பர் 2024, 3:31 am IST

திசையன்விளை அருகே கொலை வழக்கில் தொடா்புடைய பெண் உள்பட 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

திசையன்விளை அருகேயுள்ள கக்கன்நகரைச் சோ்ந்தவா்கள் மதிராஜன், மதியழகன். இவா்கள் இருவரும் முன்விரோதம் காரணமாக சிலரால் கடந்த ஆக.18இல் கொலை செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக திசையன்விளை போலீஸாா் வழக்குப்பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த சுடலை மணி மகன்கள் ராஜ்குமாா்(28), அவரது மனைவி திவ்யா(28), வெவின்குமாா்(26), அருண்குமாா் என்ற பருண்குமாா்(20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதில், ராஜ்குமாா், வெவின்குமாா், அருண்குமாா் என்ற பருண்குமாா் ஆகியோா் எஸ்.பி. என். சிலம்பரசன் பரிந்துரைப்படி, ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் உத்தரவின்பேரில், குண்டா் தடுப்புக் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 17) கைது செய்யப்பட்டனா். மேலும் திவ்யாவை காவல் ஆய்வாளா் சீதாலெட்சுமி குண்டா் தடுப்பு சட்டத்தில் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தாா்.