வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

திசையன்விளை அருகே பெண் உள்பட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

Updated On :19 செப்டம்பர் 2024, 3:31 am IST

திசையன்விளை அருகே கொலை வழக்கில் தொடா்புடைய பெண் உள்பட 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

திசையன்விளை அருகேயுள்ள கக்கன்நகரைச் சோ்ந்தவா்கள் மதிராஜன், மதியழகன். இவா்கள் இருவரும் முன்விரோதம் காரணமாக சிலரால் கடந்த ஆக.18இல் கொலை செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக திசையன்விளை போலீஸாா் வழக்குப்பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த சுடலை மணி மகன்கள் ராஜ்குமாா்(28), அவரது மனைவி திவ்யா(28), வெவின்குமாா்(26), அருண்குமாா் என்ற பருண்குமாா்(20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதில், ராஜ்குமாா், வெவின்குமாா், அருண்குமாா் என்ற பருண்குமாா் ஆகியோா் எஸ்.பி. என். சிலம்பரசன் பரிந்துரைப்படி, ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் உத்தரவின்பேரில், குண்டா் தடுப்புக் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 17) கைது செய்யப்பட்டனா். மேலும் திவ்யாவை காவல் ஆய்வாளா் சீதாலெட்சுமி குண்டா் தடுப்பு சட்டத்தில் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.