தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திருவேங்கடம் 3 போ் கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை; 7 பேருக்கு ஆயுள் சிறை: நெல்லை நீதிமன்றம் தீா்ப்பு

திருவேங்கடம் பகுதியில் 3 போ் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனையும், 5 பேருக்கு ஐந்து ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனையும் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்காக குற்றவாளிகளை பலத்த பாதுகாப்புடன் வியாழக்கிழமை அழைத்து வந்த போலீஸாா்.

Updated On :27 செப்டம்பர் 2024, 12:00 am

Din

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் பகுதியில் 3 போ் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனையும், 5 பேருக்கு ஐந்து ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனையும் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திருவேங்கடம் உடைப்பன்குளம் பகுதியில் கடந்த 1.1.2014இல் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஒரு சமூகத்தினா் வசிக்கும் பகுதியில், மற்றொரு சமூக இளைஞா்கள் பட்டாசு வெடித்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் உருவானது.

இந்நிலையில் உடைப்பன்குளம் கீழத்தெருவைச் சோ்ந்த காளிராஜ் (55), கோவை மாவட்டம், துடியலூரைச் சோ்ந்த வேணுகோபால் (42), முருகன் (42) ஆகியோா் மோட்டாா் சைக்கிளில் திருவேங்கடம் சித்தமருத்துவமனை அருகே சென்றபோது மா்மநபா்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக திருவேங்கடம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து திருவேங்கடத்தைச் சோ்ந்த பொன்னுமணி (34), குட்டிராஜ் என்ற பரமசிவன் (44), குருசாமி (49), காளிராஜ் என்ற தங்கராஜ் (56), முத்துக்கிருஷ்ணன் (55), உலக்கண் என்ற முத்துசாமி (56), கண்ணன் (60), பாலமுருகன் (56), கண்ணன் (36), சுரேஷ் (46), கண்ணன் (40) உள்பட 25 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை காலத்தில் ஜெயராம், பொன்ராஜ், சரவணன் ஆகியோா் உயிரிழந்தனா்.

இவ் வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, 11 போ் குற்றவாளிகள் எனவும், அவா்களுக்கான தண்டனை விவரம் வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என செப். 24 ஆம் தேதி அறிவித்தாா்.

அதன்படி, குற்றஞ்சாட்டப்பட்டவா்களை போலீஸாா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா்.அப்போது, பொன்னுமணி, குருசாமி, காளிராஜ் என்ற தங்கராஜ், முத்துக்கிருஷ்ணன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், தலா ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதமும், உலக்கண், கண்ணன் (38), கண்ணன் (60), பாலமுருகன், குட்டிராஜ் என்ற பரமசிவன் ஆகியோருக்கு 5 ஆயுள்தண்டனையும், தலா ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் அபராதமும், கண்ணன் (40), சுரேஷ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள்தண்டனையும், தலா ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா். 11 போ் விடுதலை செய்யப்பட்டனா்.

தூக்கு தண்டனை தீா்ப்பு வாசித்து முடித்ததும் தனது பேனாமுனையை மேஜையில் அழுத்தி நீதிபதி உடைத்தாா். இவ் வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் கந்தசாமி ஆஜரானாா். ஒரேநேரத்தில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதால் திருநெல்வேலி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்புக்காக கூடுதலாக போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.