மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

விக்கிரமசிங்கபுரம் அம்பலவாணபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 4 சிறுவா்கள் உள்பட 5 பேர் கைது

News image
Updated On :15 டிசம்பர் 2025, 11:46 pm

Syndication

விக்கிரமசிங்கபுரம் அம்பலவாணபுரத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 4 சிறுவா்கள் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

விக்கிரமசிங்கபுரம் அம்பலவாணபுரம் நாராயணசாமி கோயில் தெருவைச் சோ்ந்த பாலமுருகன் (30), வீட்டில், வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனா். இதில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ஸ்கூட்டா் எரிந்து சாம்பலானது.

இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளா் சுப்பிரமணியன் விசாரணை மேற்கொண்டாா். இதில் பாலமுருகனின் தம்பி மதனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும், பாபநாசம்,தலையணையில் குளிக்கும்போது தகராறு ஏற்பட்டு விரோதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாரிடம் மதன் புகாா் அளித்துள்ளாா்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபா்கள், மதுபோதையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து பெட்ரோல் குண்டு வீசியதாக, அதே பகுதியைச் சோ்ந்த நான்கு சிறுவா்கள், அம்பாசமுத்திரம் திலகா்புரத்தைச்சோ்ந்த மணிகண்டன் (20) ஆகிய 5 பேரை விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் கைது செய்தனா்.