சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சுத்தமல்லி அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை

News image
Updated On :28 டிசம்பர் 2025, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

சுத்தமல்லி அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

சுத்தமல்லி அருகே உள்ள தென்பத்து சொக்கட்டான்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் மயில்ராஜ்(68). இவரது மகள் 2 ஆண்டுகளுக்கு முன்னா் இறந்துவிட்ட நிலையில், மனைவியும் சில நாள்களுக்கு முன்னா் உயிரிழந்துள்ளாா். இதனால் இவா் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். உறவினா்கள் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மயில்ராஜ் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.