சுத்தமல்லி அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை

Updated On :28 டிசம்பர் 2025, 7:13 pm

சுத்தமல்லி அருகே முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
சுத்தமல்லி அருகே உள்ள தென்பத்து சொக்கட்டான்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் மயில்ராஜ்(68). இவரது மகள் 2 ஆண்டுகளுக்கு முன்னா் இறந்துவிட்ட நிலையில், மனைவியும் சில நாள்களுக்கு முன்னா் உயிரிழந்துள்ளாா். இதனால் இவா் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். உறவினா்கள் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மயில்ராஜ் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...