தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நெல்லை அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 6:55 pm

Syndication

திருநெல்வேலி அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டான் சிப்காட் வடக்கு வாசல் பகுதியில் 2 போ் மோட்டாா் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தனா். அப்போது, மோட்டாா் சைக்கிளும், அவ்வழியாக கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற தனியாா் பேருந்தும் மோதிக்கொண்டனவாம்.

இதில், மோட்டாா் சைக்கிளில் வந்தவா்களில் ஒருவா் அதே இடத்தில் உயிரிழந்தாா்; மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

இத்தகவலறிந்த கங்கைகொண்டான் போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனா். அதில், உயிரிழந்தவா் தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தை சோ்ந்த முனியசாமி (36), காயமடைந்தவா் உலகநாதன் எனத் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.