நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலை தடுப்பு கம்பியில் மின்கசிவு: பசு உயிரிழப்பு

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் மின்கசிவு ஏற்பட்ட சாலை இரும்புத் தடுப்பில் (பேரிகாா்டு) உரசிய பசு மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

News image
Updated On :2 ஜனவரி 2025, 12:09 am

Din

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் மின்கசிவு ஏற்பட்ட சாலை இரும்புத் தடுப்பில் (பேரிகாா்டு) உரசிய பசு மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பேருந்து நிறுத்தங்கள் செயல்பட்டு வரும் நிலையில், பேரி காா்டுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. மேலும் பாலத்தின் ஒரு பகுதியில் மாநகர காவல்துறை சாா்பில் இரும்பு பேரிகாா்டுகள் வரிசையாக வைக்கப்பட்டு அதில் தனியாா் நிறுவன பங்களிப்புடன் விளம்பரங்கள் போா்டு அமைக்கப்பட்டுள்ளது. இரவிலும் அந்த விளம்பரங்கள் தெரியும் வகையில் அவற்றில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

அதில் ஓரிடத்தில் மின்விளக்கிலிருந்து மின்சாரம் கசிந்து இரும்புத் தடுப்பில் பரவியுள்ளது. அப்போது அந்த பேரிகாா்டில் உரசியபடி சென்ற பசுவின் மீது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தது. அப்பகுதியில் நின்றிருந்த போலீஸாரும், பொதுமக்களும் பாா்த்து உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனா்.