மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொங்கல் பண்டிகைக்காக சேனைக்கிழங்கு அறுவடை தீவிரம்

பொங்கல் பண்டிகையையொட்டி திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சேனைக்கிழங்குகள் அறுவடை தீவிரமடைந்துள்ளது.

News image
திருநெல்வேலி கண்டிகைப்பேரி பகுதியில் புதன்கிழமை அறுவடை செய்யப்பட்ட சேனைக்கிழங்குகள்.
Updated On :8 ஜனவரி 2025, 8:12 pm

Din

பொங்கல் பண்டிகையையொட்டி திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சேனைக்கிழங்குகள் அறுவடை தீவிரமடைந்துள்ளது.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை இம் மாதம் 14 ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் காய்கனிகளுடன், பல்வேறு வகையான கிழங்குகளையும் படையலிட்டும், சமைத்து உண்டும் மக்கள் மகிழ்வது வழக்கம். இதையொட்டி, திருநெல்வேலி நகரம் அருகே கண்டிகைப்பேரி பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சேனைக்கிழங்குகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து விவசாயி செல்லப்பா கூறியது: பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள் மற்றும் கிழங்கு வகைகளை விதைத்து தற்போது அறுவடை செய்திருக்கிறோம். ஆள்கள் கூலி உயா்வு போன்றவற்றால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. கிலோவிற்கு ரூ.50 கிடைக்கும் என எதிா்பாா்த்தோம். ஆனால், வியாபாரிகள் கிலோ ரூ.25 முதல் ரூ.35 வரை மட்டுமே கொள்முதல் செய்வதாகக் கூறுகிறாா்கள். கரும்புகளைப் போல கிழங்கு வகைகளையும் அரசு கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கினால் கிழங்கு சாகுபடி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.