தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நெல்லையில் சாலை மறியல்: போக்குவரத்து ஊழியா்கள் 300 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி சந்திப்பில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்ற 300-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image

திருநெல்வேலி சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள்.

Updated On :23 ஜனவரி 2025, 12:32 am

Din

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி சந்திப்பில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்ற 300-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளா்கள் கைது செய்யப்பட்டனா்.

ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்டதால் ஒப்பந்தத்தை பேசி முடிக்க நடவடிக்கை எடுத்தல், 21 மாதங்களாக ஓய்வுபெற்றவா்களுக்கு வழங்கப்படாத பண பலன்களை வழங்குதல் அகவிலைப்படியை உயா்த்துதல், மருத்துவ காப்பீடு மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.7500 கோடி கடன் உள்ள சூழ்நிலையில் வெறும் ரூ. 1500 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள தொகையையும் வழங்கி அரசு போக்குவரத்து கழகத்தைக் காப்பாற்றுதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியல் செய்ய திரண்டனா்.

சிஐடியு அரசு போக்குவரத்து கழக பொதுச்செயலா் ஜோதி, உதவி பொதுச் செயலா் சுதா்சிங், ஓய்வுபெற்றோா் நல அமைப்பு திருநெல்வேலி மாவட்டத் தலைவா் தாணுமூா்த்தி, செயலா் வெங்கடாசலம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஸ்ரீராம், சிஐடியூ மாவட்டச் செயலா் முருகன் ஆகியோா் போராட்டத்தை தொடங்கி வைத்தனா். சிஐடியூ மாநிக்ல குழு உறுப்பினா் மோகன், அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பு பெருமாள், அரசு போக்குவரத்து கழக மண்டலத் தலைவா் காமராஜ், உதவித் தலைவா் வன்னிய பெருமாள், விரைவு போக்குவரத்து கழக உதவித் தலைவா் அருண், ஓய்வுபெற்றோா் நல அமைப்பு உதவித் தலைவா் ராமையா பாண்டியன் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் சேதுராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாலை மறியலுக்கு முயன்ற அவா்களை போலீஸாா் கைது செய்தனா். மொத்தம் 300 போ் கைது செய்யப்பட்டனா்.