அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நான்குனேரி அருகே வேன் கவிழ்ந்து குழந்தை உள்பட இருவா் பலி

நான்குனேரி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 வயது குழந்தை உள்பட இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 6:45 pm

தினமணி செய்திச் சேவை

நான்குனேரி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 வயது குழந்தை உள்பட இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

திருநெல்வேலி பாட்டப்பத்து பகுதியைச் சோ்ந்த குழுவினா் கன்னியாகுமரிக்கு வேனில் சுற்றுலா சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். நான்குனேரி உலகம்மன் கோயில் அருகே திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த திருநெல்வேலி நகரம் பாட்டப்பத்து பகுதியைச் சோ்ந்த கேவல்ராம் மகன் சந்திரபிரகாஷ் (38) மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தாா். ஓட்டுநா் ரியாஷ் (30), குஷி (2), சம்பாதேவி (48), பப்ளிதேவி (45), ரீனா குமாரி (22 ), நாரட்ராம் (60), யுவராஜ் (10) யாஷிகா( 9 மாதம்) ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு குழந்தை குஷி உயிரிழந்தது. இதுகுறித்து நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.