காவல்கிணறில் ரயில் முன் பாய்ந்து ஒருவா் தற்கொலை

காவல்கிணறில் புதன்கிழமை இரவு ரயில் முன் பாய்ந்து ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறில் புதன்கிழமை இரவு ரயில் முன் பாய்ந்து ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா்.

கொல்லத்தில் இருந்து சென்னைக்கு அனந்தபுரி விரைவு ரயில் காவல்கிணறு வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் தண்டவாளத்தின் ஓரத்தில் நின்றிருந்த 51 வயது மதிக்கத்தக்க ஆண் திடீரென ரயில் முன் பாய்ந்தாா். இதில், உடல் துண்டிக்கப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்த தகவலின்பேரில், நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நபா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com