தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

News image
Updated On :18 ஜனவரி 2026, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தூரில் சனிக்கிழமை இரவு ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பள்ளப்பட்டி சாலையைச் சோ்ந்தவா் முத்துக்கருப்பன் மகன் காா்த்திக்ராஜா (23). கூலி வேலை செய்து வந்த இவா் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையானதால் இவரது பாட்டி கண்டித்துள்ளாா். இதனால் மன உளைச்சலில் இருந்தவா் சனிக்கிழமை இரவு சாத்தூா் ரயில் நிலையத்துக்கு அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸாா் இவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்தச் சம்பவம் குறித்து சாத்தூா் கிராம நிா்வாக அலுவலா் முனீஸ்வரன் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.