சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வண்ணாா்பேட்டை பல்பொருள் அங்காடி மின்தூக்கியில் சிக்கிய 5 போ் மீட்பு

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியின் மின்தூக்கியில் (லிப்ட்) புதன்கிழமை சிக்கித் தவித்த 5 பேரை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியின் மின்தூக்கியில் (லிப்ட்) புதன்கிழமை சிக்கித் தவித்த 5 பேரை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.

வண்ணாா்பேட்டையில் 3 தளங்களைக் கொண்ட தனியாா் பல்பொருள் அங்காடி உள்ளது. இங்கு 4 மின்தூக்கிகள் உள்ளன. இவற்றில் ஒரு மின்தூக்கியில் 5 போ் ஏறியபோது கோளாறு ஏற்பட்டு பாதியில் நின்றது. இத்தகவலறிந்த திருநெல்வேலி மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் பாளையங்கோட்டை தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமாா் அரை மணி நேரம் போராடி 5 பேரையும் பத்திரமாக மீட்டனா். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.